செயற்கை நுண்ணறிவு ஓவியமென தோழர் திரு அருள்குமரன் முகநூலில் பகிர்ந்த சில ஓவியங்கள் என்னில் முகிழ்த்த வெண்பாக்கள்.
================================
================================
=========================
ஒளியில் சிரிக்கும் ஒயில்
========================
களிப்புங் கனவுங் கவியெனப் பொங்க,
நெளிவிலா தன்பின் நினைவாற் - றுளிர்த்து,
வெளிப்படும் எண்ணமே விண்ணிலே தோன்று
மொளியிற் சிரிக்கு மொயில்.
விண்ணில் முழுதும் விளைந்த உணர்வினைப்
பண்ணெனப் பாடவைக்கும் பாவையே! - வெண்ணிலா
வண்ணமாய் மின்னிடும் மங்கையுன் கண்ணொளி
எண்ண முடியா வெழில்.
========================
இராச தியாகராசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக