2013ஆம் ஆண்டளவில், என்றெண்ணுகிறேன்; கவிஞர்திரு பஃருதீன் இப்னு ஹம்துன் (Fakhrudeen Ibnu Hamdun), தம்மிழையில் "பேனாவும் பெண்ணாமென் பேன்," என்கிற சிலேடையைப் பகிர்ந்தார். அவ்விழையில் நானும் "பெண்ணென்றும் பேனா புகல்," என்கிற ஈற்றடியில் சிலேடை வெண்பாவொன்று பகிர்ந்தேன்.
====================================
====================================
பெண்ணென்றும் பேனா புகல்.
(இருவிகற்ப நேரிசை வெண்பா)
=========================
கையடங்கும் அன்பதுவால், காண்பவற்றில் தோன்றியே
மெய்யுருவாய் என்னைநீ வெல்வதனால் - மைந்தனுக்காய்ப்
பண்ணெழுதிக் காக்கவைக்கும் பாவலன்தீந் தூவலன்பே!
பெண்ணென்றும் பேனா புகல்.
========================
இராச தியாகராசன்.
பிகு:
====
பெண்ணும்/ பேனாவும் அன்பினால் கையங்கும்; காணும் காட்சிகளில் மெய்யுருவாய்த் தோன்றியே என்னைக் காதலால்/ கவிதையால் வெற்றி கொள்ளும்; பெண்ணுடன் பேசுகையில்/பண்ணெழுதுகையில் மைந்தனையும் காக்க வைக்கும்; தூவும் மெல்லன்பால்/ எழுதும் மசித்தூவலால் உளங்கவரும். (தீந்தூவல் = தீந்தா+தூவல் = மசி+பேனா)
====
பெண்ணும்/ பேனாவும் அன்பினால் கையங்கும்; காணும் காட்சிகளில் மெய்யுருவாய்த் தோன்றியே என்னைக் காதலால்/ கவிதையால் வெற்றி கொள்ளும்; பெண்ணுடன் பேசுகையில்/பண்ணெழுதுகையில் மைந்தனையும் காக்க வைக்கும்; தூவும் மெல்லன்பால்/ எழுதும் மசித்தூவலால் உளங்கவரும். (தீந்தூவல் = தீந்தா+தூவல் = மசி+பேனா)
கவிஞர் ஃபக்ருதீன் இப்னு ஹம்துன் எழுதிய சிலேடை வெண்பா...
=============================================================
மையிட்டுக் கொள்ளுதலால் மெய்த்தோற்றம் காட்டுதலால்
கைப்பிடித்த தன்னவரின் காரியத்தை ஆற்றுதலால்
காணா உலகினை காட்டித் தருதலால்
பேனாவும் பெண்ணாமென் பேன்!
- ஃபக்ருதீன் இப்னு ஹம்துன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக