சனி, 13 ஜூலை, 2024

எப்போதோ ஒருமுறை பேரா பசுபதி (தொரந்தோ) (Pas Pasupathy), "செய்யுளும் சிசுவும்" என்ற தலைப்பில் சிலேடை வெண்பாட்டொன்றைப் பகிர்ந்தார்;  அவரது அடியொற்றி இந்தச் சின்னவன் வனைந்த வெண்பாயிது.
=================================







வண்ணப்பாவும் மழலையும்....
(இருவிகற்ப நேரிசை சிலேடை வெண்பா)
=================================
அன்னமெனச் சின்னஅசை யாருஞ்சீர் நன்னடையால், 
புன்மையிலா மெய்யொளிரும் புத்தழகால் - கன்னலனை
ஒண்மைமிகு மென்மழலை ஒண்டமிழின் ஓசையதால், 
வண்ணாப்பா நேராம் மகவு.
=======================
இராச. தியாகராசன்

பிகு:
====
அன்னம் போல சின்னதாய் அசைவதால், அருமை சீர்நடைப் புத்தழகின்  கவர்ச்சியால், கன்னற்சுவை இன்மழலை ஒண்டமிழ் ஓசையால், வண்ணப் பாட்டும் மகவும் ஒன்றெனக் கொள்வீர். வண்ணப்பா - செய்யுளோத்தின் ஒரு வகை. மகவு - மழலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக