செவ்வாய், 7 நவம்பர், 2023
பொழிலுருவே வாழ்வியலோ...
வியாழன், 2 நவம்பர், 2023
இறையென்னும் மெய்ம்மை...
கயலெனவே உள்ளந்தான் துள்ளுதடி...
செவ்வாய், 31 அக்டோபர், 2023
என்னிடத்தே உண்டு...
சனி, 28 அக்டோபர், 2023
அரவமில்லா இரவுப் பொழுது..
புதன், 25 அக்டோபர், 2023
பாரதி நான்மணி மாலை
========================================
புதன், 18 அக்டோபர், 2023
வாழ்க்கைக் கல்வி
இறங்கிய நாள்முதலாய், இருந்திறக்கும் நாள்வரையில் எத்தனையெத்தனையோ கற்கிறோம். கற்றலே மேன்மை. நம் பிள்ளைகளுக்குக் கல்வியைத் தராமல் இருந்துவிடாதீர்கள். கட்டிக் கொடுத்தச் சோறும், சேர்த்து வைத்த செல்வமும் வாழ்வியலை மேம்படுத்தும் என்பது மிகக் குறைந்த மாற்றுக் கருத்தே. கற்றவரில் ஒரிரண்டு விழுக்காடு மூளை மழுங்கியவராய், தன்னலம் கொண்டவராய், அடுத்தவரை ஏய்ப்பவராய் இருக்கலாம். ஆனால் கற்றவர் அனைவரும் தீயவரல்லர்; எனவே கல்வியால் மட்டுமே யாரையும், எதையும் பகுத்தறிய ஏலும். நான் சொல்கிறேன் என்பதற்காய் எதுவும் மெய்ம்மை ஆகிவிடாது. காலத்தீ புடம் போட்ட, ஐயனின் குறளைப் பார்த்தாலே விளங்கும், "எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு."
====================================
(கட்டளைக் கலித்துறை)
===================
பரந்த மரத்திலே நூலின்றிச் சிக்கிய பட்டமதைத்
துரட்டி யுடனேறி தொற்றி யெடுக்கத் துணிந்தவனை,
வரிப்பூண் மினுக்கும் மிளாறால் விளாசிய மாமனது
கரந்தடி கூடப் புவியில் தகவான கல்வியன்றோ?
கண்ண னவரின் கடைக்கு விரைந்துநீ காற்றெனவே
அன்னை அனுப்பியச் சொல்மீறிக் கைச்சூதாம் ஆட்டமெனும்
கண்கட்டில் விட்டதாற் கண்ட அடிகூடக் கல்வியன்றோ?
கட்டு நுடங்கிடைக் கன்னியைக் கண்ணாலே கண்டதுமே
கட்டிலா மாமன மத்தாப்பை இல்லாளுங் காதுபற்றிக்
கட்டறக் குட்டிடக் கற்றதும் கற்பகக் கல்வியன்றோ?
பள்ளிக் கழிவறைப் போந்தே திருடன்போல் பாதகமாங்
சுள்ளெனச் சொல்லியே ஆசான் அரும்பால சுந்தரவர்,
கள்ள மழிக்கக் கொடுத்த அடிகூடக் கல்வியன்றோ?
நற்றாயும் தன்னிடைப் பாரம் இறக்கிய நாள்முதலாய்,
உற்றிடுந் துன்பமே ஆயிர மானாலு முண்மையிதே;
கற்பிக்கும் யாவுமே கோடி யெனுமருங் கல்வியன்றோ?
===========================================
இராச. தியாகராசன்
பிகு:
மிளாறு = தண்டிக்கும் பிரம்பு/ மெல்லிய குச்சி.
கரந்தடி = மறைந்து சடுதியில் அடித்தல்/ கொரில்லாப் போர்முறை.
நுடங்கிடை = சிற்றிடை/ நுட்பமான இடை.
கோது = குற்றம்/ பதர்.
பெண்டிரின் உண்மை உயர்வு...
எனக்குச் சாதியுமில்லை; மதமுமில்லை; ஆற்றலுணர், அறிவென்ற அகண்ட அறிதலு மில்லை: எழுச்சியுடன் ஆர்த்தெழுகும் ஆற்றலில்லா அறிவிலி யென்றிங்கே அலைந்தலைந்து தேடுகிறேன்; அறம் எங்கேயென்றே தேடுகின்றேன்! எதற்கிந்த விளையாட்டு; ஏனிந்தத் தீக்குளியல்? வேதனைதான் வாழ்வென்றால், மேதினியில் நீதியெங்கே? நாதனவன் நேர்கணக்கை நாடுகின்றேன் நாடோறும்!
காதலும்/ கனவுலா கவிதை மட்டுந்தான் சாசுவதமோ? சாற்றுங்கள் சற்றே! நடக்கும் கொடுமைகளைப் பேச வாயற்ற, சாதிமதச் சழக்குகள் தருவதென்ன? உனக்கும் ஆறடி/ எனக்கும் ஆறடி; இல்லையெனில் உனக்கும் ஒருவண்டி எருமுட்டை; எனக்கும் ஒருவண்டி எருமுட்டை. இதில் இறுமாப்பு/ ஏக்கழுத்தம் கொண்டு ஆட்டங்கள். கவிஞர்களே பாடுங்கள்; நாளைய வைகறைக்காக இன்றே அறம் பாடிச் சாடுங்கள். வெங்கதிர் எழுந்து வெள்ளியொளி பரவட்டும்.
===========================================
===========================================
பெண்டிரின் உண்மை உயர்வு....
==============================
மங்கைச் சிட்டென, மலரும் மொட்டென,
மினுக்கும் பொட்டென, வெள்ளித் தட்டெனத்
தங்கத் துகளாம் சங்கத் தமிழைக்
தழுவி யணைக்குஞ் சந்தக் கவிஞரே!
மின்னும் பாக்கள் விளையும் மாகடல்;
மின்னுங் கவிஞர் வனையும் பாக்கடல்;
சித்தக் கடலில் சிக்குஞ் சிப்பிகள்;
எத்தனைச் சிப்பியில் இருக்குமோ முத்து?
அருமைத் தமிழ்க்கரை அளையுமென் கரத்திலே,
தரமெனக் கிடைப்பதோ சங்குஞ் சோழியும்;
ஆழியின் கரையிலே அலையால் ஒதுங்கிடும்
சோழியும் கிளிஞ்சலும் சுந்தரச் சிப்பியுஞ்
சந்தனத் தமிழின் சங்குஞ் சிறப்பெனில்,
செந்தமிழ் நித்திலஞ் சேர்வது மெவர்க்கோ?
பழச்சுவைக் கவிதை பழமைதா னாயினும்,
உழலுமென் நினைவிலே வெறுமை; உண்மை!
கற்பனைக் கவிவளம் கவிஞனின் சொத்து;
விற்பனைக் கல்லவ் விளைந்திடும் முத்து!
ஆழ்கடல் நுளைந்தே அறிஞரும் முத்தினை
மூழ்கித் தேடி முனையும் போதிலே,
சூழ்மலை முகிலெழிற் சூழலைப் புனைகையில்,
வாழ்விலே பெண்ணின வன்முறை சாடுவீர்!
கவின்மிகு கனவுலாக் காதலை வனைகையில்,
புவியினில் பொன்மகள் பொறுதலைச் சாடுவீர்!
நாணுமச் செம்மொழி நங்கையைப் பாடுவோர்க்
காணுமிப் பெண்ணழி கள்ளமுஞ் சாடுவீர்!
கண்நிகர் முன்னோர் நன்னெறி ஏத்துவோர்ப்
புண்நிகர் புல்லரின் புன்னெறி சாடுவீர்!
மன்னுயிர் காத்திடும் மழைவளஞ் சொல்கையில்,
இன்றைய மங்கையர் இழிநிலைச் சாடுவீர்!
பாட்டி லுறைந்திடு பண்ணிசைப் போற்றுவோர்
நாட்டின் நங்கையர் நாசமுஞ் சாடுவீர்!
பல்சுவை யுணவால், பல்வகை யணியால்,
நல்லரும் நிலையை நங்கைய ருறுவரோ?
இருக்கையில் மகளிரு மின்றே பெற்றிடும்
உரிமைதான் உண்மையில் உயர்வெனச் சாற்றுவீர்!
=====================================
இராச. தியாகராசன்.
பிகு:
=====
நுளைதல் = நீரில் அமிழ்ந்து விளையாடல், முத்துக் குளித்தல் (பரதவர் மீனவர் எனில், நுளையர் முத்துக் குளிப்பவர்)
சனி, 1 ஏப்ரல், 2023
நூற்கடல் திரு தி.வே.கோபாலய்யர்...
காவிரிக்கரையில் திரு வேங்கட்டராமன், திருமதி இலக்குமியம்மாள் ஆகியோர்க்கு நல்மகனாய் பிறந்தவர், மாந்தக்கணினி, நூற்கடல் என்றெல்லாம் போற்றப்பட்ட திரு தி.வே.கோபாலய்யர். அவர் வாழ்ந்த காலத்தில், அவருடன் அளவளாவி, என்றன் இலக்கண ஐயம் பலவற்றை அகற்றி, நான் தெளிவு பெற்றிருக்கிறேன். அவருடைய 26 ஆண்டுகால உழைப்பில் உருவான18 தொகுப்புகள் கொண்ட, "பேரிலக்கண அகராதி," தானெனக்கு இற்றைக்கும் என் இலக்கண ஐயங்களைக் களைய உதவுகிறது.
==================================
==================================நூற்கடல் தி.வே.கோ.
====================
பிகு:
===
*வேங்கடத்தவன்: தந்தை பெயர்: வேங்கட்டராமன்.
வியாழன், 30 மார்ச், 2023
உள்ளங்கவர் காதலி....
பலருக்கும் அன்பான காதலி இருக்கக் கூடும். அவருடனேயே திருமணமும் ஆகியிருக்கக் கூடும்; ஆகாமலும் போயிருக்கக் கூடும். ஆனால் காதலென்பது மெய்ம்மை. என்னுடைய உள்ளங்கவர் காதலி யாரென்று கேட்கிறீர்களா?
================================
![]() |
| மகாகவி பாரதி |
சனி, 10 டிசம்பர், 2022
பாட்டன் மறுபடியும் வரவேண்டும்....
சிந்துவேந்தனுக்குப் பிறந்தநாள் (டிசம்பர், 11ஆம் நாள்). மக்கள்கவி, மாந்தநேயன், நாட்டுப்பற்றாளன், விடுதலைப் போராட்ட வீரன், சமுதாயச் சீர்திருத்தவாதி, என்றெல்லாம் ஊரெங்கும் போற்றப்பட்ட மகாகவியின் இறுதிச் சடங்கிற்கு வந்தவர்கள் வெறும் 14 பேர்கள் மட்டுமே! இருக்கும் போது ஒருவரின் மதிப்பைப் போற்றாது விட்டுவிட்டு, இல்லாமல் போன பின்னர், நம்நாட்டு அரசியலார் செய்கின்ற மரியாதை என்ன; சூட்டுகின்ற கணக்கிலடங்கா மாலையென்ன; நடத்துகின்ற நாடகமென்ன?
கம்பன், புகழேந்தி, ஔவை, ஒட்டக்கூத்தர், காளமேகம், தாகூர், பாவேந்தர், கவியரசு, சேக்சுபியர், காஃப்கா, யீட்சு, கீட்சு, வேட்சுவர்த்து, நெருடா, எசுரா பவுண்டு, பைரன் இப்படிப் பலரின் (இன்னும் பல கவிஞர்கள்) பாடற் படைப்புகளில் மூழ்கித் திளைத்தே அகங்குளிரச் சுவைத்திருந்தாலும், நம்முடைய சிந்து வேந்தனின் கவிதைகளே என்றன் முதல் காதலி; அவனே என்றன் கவிதைகளின் தோணி. இந்தப் பிறந்தநாளில் அவனுடைய மொழியாற்றலை, கவித்திறனை, நாட்டுப்பற்றை, சமத்துவ அறத்தை, குமுகாயச் சிந்தனையை எண்ணி நன்றியுடன் நினைவுகூர்கிறேன்.
=========================================
தேனமுத வாரிதியாய்த் தீந்தமிழின் காவலனாய்க்
காணிநிலம் காளியிடம் கேட்டவனின் பாக்களிலே
காணுங் குமுகாயக் கார்முகிலாஞ் சிந்தனையென்
தோணி யெனவாகுஞ் சொல்.
=============================
=============================
செவ்வாய், 29 நவம்பர், 2022
கயல்விழியும் கூருகிரோ.....
காதலெனும் கடல்............
இரைகின்ற பெருந்நாகமோ இல்லை பின்னலெனும் வெறுங்கூந்தலோ? சீறிவரும் கூருகிரோ இல்லை சீராரும் கயல்விழியோ?
=========================================
அவளுக்கோ...
அவனுக்கோ...
அவளுக்கோ...
பிகு:
கூருகிர் = கூரிய நகம்
ஞாயிறு, 27 நவம்பர், 2022
மாயக் குதிரை......
==========================================
பிகு:
====
புதன், 23 நவம்பர், 2022
இல்லத்தரசியின் கதை...
இது நகைச்சுவை இழையோடுமொரு கவிதை அவ்வளவே! படியுங்கள்; சுவையுங்கள்; சிரியுங்கள்!
(நான்கைந்து தமிழ்ச் சொற்களையும் பெய்திருக்கிறேன்: பொருள்களின் பெயரை மாற்றுவது கொலைக் குற்றம் என்போர், தயைகூர்ந்து கடந்து போகவும். விவாதத்திற்கெல்லாம் எனக்கு விருப்பமில்லை/ நேரமும் இல்லை!)
என்தவறே தென்றுநான் இடிந்தமர்ந்து நினைத்தே நைந்தபோது,
பிகு:
======
ஞாயிறு, 6 நவம்பர், 2022
கவியெனச் சாற்றினனே.....
==================================
கவியெனச் சாற்றினனே.
(கட்டளைக் கலித்துறை)
ஒளியா லுலகி னுயிர்கள் வளர்த்திடும் வெங்கதிரே;
எயிட்சு இல்லா இனிய உலகம்....
2012ஆம் ஆண்டுக்கு முன்னர் எழுதி, புதுவையரசில் எனக்கொரு பரிசிலும் பெற்றுத் தந்த எண்சீர் அகவல் விருத்தமிது. "மாந்தரினமே முன்னெடுப்பீர் (LET COMMUNITIES LEAD)." பன்னாட்டு ஆட்கொல்லி ஆட்கொல்லி நோய்க்கு வெற்றிலைப் பாக்கு வைத்து வரவேற்கும், போதை ஊசிப் பழக்கத்தை வேரறுப்பீர்; ஓரினச் சேர்க்கையை புறந்தள்ளுவீர்; பிறன்மனை வேண்டாத பேராண்மையே பேரறம் என்று வாழ்வீர்; சமூகத்தில் ஆண்/பெண் என்று பேதமில்லாமல் கலந்துறையும் பணிகளில் இருக்கும் பேர்களும், நீண்ட தூரம் சரக்குந்து ஓட்டுகின்ற பேர்களும், பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் ஆண்/பெண் இரு சாராரும், மனவுறுதியுடன் வேற்றாளிடம் உடலுறவில்லாமல் இருக்க உறுதி கொள்வீர்; (அப்படி உறவில்லாமல் இருக்க ஏலாதென்னும் குறைந்த விழுக்காடு பேர்கள் உடலுறவின் போதாவது உறையைப் பயன்படுத்துவீர்!).
எயிட்ஸ் இல்லா இனிய உலகம்
============================================
(இதனை ஆதாஹ சந்துமா அல்லது உலகிலுள்ள
செவ்வாய், 18 அக்டோபர், 2022
அரைக காசும் உன்னுடன் வருமோ???
வாழ்வது சிலநாள், சிலரை விரும்புவதேன்? சிலரை வெறுப்பதுமேன்? அனைவரையும் நேசியுங்கள்; தாழ்வுற்றவர்க்காய் உதவுங்கள். வரும்போது எதையும் கொண்டுவரவில்லை: போகும் போதும் எதையும் கொண்டு செல்லப் போவதில்லை. இறங்கி, இருந்து, இறக்கும் வரையில் இருப்பிற்கொரு காவல் நாம் என்றுணர்ந்து வாழுங்கள்; அடுத்தவர்க்காய் வாழுங்கள்; அடுத்தவரின் அவலநிலையில் அடுப்பெரிக்காமல் வாழுங்கள்!
===============================================
அரை காசும் உன்னுடன் வருமோ.....
===============================================
பிள்ளைகளோ பெருமைகளைச் சேர்த்துவிடும்;
கற்றவரின் உள்ளத்திலே ஓங்குகின்ற,
கல்வியெனும் செல்வமதை வாங்கிவிடும்!
தன்னாட்டின் மக்களையே மாக்களெனத்
தானெண்ணித் தருக்குடனே ஆண்டவரின்,
முன்நிகழ்ந்த வரலாறு சொல்லுகின்ற,
முகவரியை அறியாமல் தினந்தோறும்,
கைந்நிறைய காசென்றும் மணிக்கணக்கிற்
காத்திருந்து கூவுகின்ற மக்களென்றும்,
வையகத்தின் புகழ்போதை தலைக்கேற
வசதியொடு மன்னரென வாழ்வோரும்,
முற்றியிங்கு சருகிலையாய் உதிர்கையிலே
அத்தனவன் கயிற்றாட்டம் நிற்கையிலே,
அரைகாசும் அவருடனே வருமாமோ?
================================
இராச. தியாகராசன்
காப்பதுன்றன் பாரமே....
கருப்பையா, கருப்பையா காப்பதுன்றன் பாரமே! அருள்மிகு ஐயப்பன் பஜனையில் நான் பாடும் பாட்டின் மெட்டு.
===================================
===================================
==========================
குலதெய்வக் கருப்பையா;
கருப்பையா, கருப்பையா,
கருணைசெய்வாய் கருப்பையா (கருப்பையா)
காட்டின் நடுவில் கனசோராய்
கருப்பன் என்ற பேரினிலே,
தபசில் அமர்ந்தச் சாமியை,
தளபதி கருப்பா காக்கின்றாய்! (தளபதி) (கருப்பையா)
அவல்பொரி கடலைவைத்து
அன்பாய்ப் பூசை செய்குவேன்;
கருப்பட்டிஎள் வைத்தேநான்
கருப்பனுன்னைப் பாடுவேன்! (கருப்ப) (கருப்பையா)
புனுகுதனை வாங்குவேன்;
புருவங்களில் சாத்துவேன்;
கண்மலரும் சாத்துவேன்
காப்பதுன்றன் பாரமே! (காப்ப) (கருப்பையா)
பதினெட்டு படிகளிலே
வாழுமென்றன் கருப்பனே;
கதியின்றே அலையுமெனை
காப்பதுன்றன் பாரமே! (காப்ப) (கருப்பையா)
இராச. தியாகராசன்.
பாப்புதுவை வாழியவே....
=====================================
எம்புதுவை வாழியவே....
=======================
வரைந்திடும் வண்ணமாய், வள்ளையாய்ச் சிந்துமாய்,
நரையறா இலக்கணஞ்சேர் நற்கவிதை நான்வனைய,
கரையிலா இலக்கியக் கவிப்புதுவை வாழியவே!
நிறைவான இலக்கியமும், நேர்த்திமிகு இலக்கணமும்,
நறுந்தேனாய்ப் பொலிகின்ற நாவினிக்கும் பாட்டியலும்,
அறம்பொருள் இன்பவியல் அத்தனையும் நானெழுதச்
சிறப்புடனே மின்னுகின்றச் சீர்புதுவை வாழியவே!
தீவானச் செந்தழலாய்த் தீந்தமிழிற் சொல்லெடுக்கித்
தூவானச் சாரலென தொல்தமிழில் பன்னூறாய்
நாவார நற்கவிதை நாடோறும் நான்புனைய
பாவானம் போலொளிரும் பாப்புதுவை வாழியவே!
வருவானே நிச்சயம் வருவானே....
===================================
===================================
வருவானே நிச்சயமாய் வருவானே...
===================================
========
நாட்டுக்குள்ளும், ஊருக்குள்ளும்
வீட்டுக்குள்ளும், உறவுக்குள்ளும்
வருவானே நிச்சயமாய் வருவானே!
===========
=========


.jpg)














