ஞாயிறு, 28 நவம்பர், 2021

மணக்கின்ற நினைவுகள்...

நினைவுகள் மனத்தில் என்றும் மணக்கின்றன.....
==============================================





 



=============================================
மணக்கின்ற நினைவுகள்.....
==========================
எரித்துச் சுடுகின்ற இரவினிலே,
சிரித்துப் பொழிகின்ற நிலவினிலே,
விரிந்து படர்கின்ற உறவினிலே,
பரந்தே உறைகின்ற உணர்விதுவோ?

தெறித்துப் பிரிகின்ற தனிமையிலே,
புறுத்தே எரிகின்ற அழகினிலே,
மறைந்து விரிகின்ற வழியினிலே,
அறுந்தே சரிகின்ற கனவிதுவோ?

புலர்ந்து மலர்கின்ற பொழுதினிலே
மலர்ந்து மணக்கின்ற மலர்களிலே,
கலைந்து கிடக்கின்ற இனிமையிலே,
நிறைந்தே வழிகின்ற நினைவிதுவோ?
===========================
இராச. தியாகராசன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக