ஞாயிறு, 2 ஜனவரி, 2022

சத்ய விரதனே; தர்ம பாலகா....

என்னில் உறைந்தெனை என்றும் வளந்தரும் என்னய்யனே...
============================================













============================================
சத்ய விரதனே; தர்ம பாலகா; சரணம் ஐயனே!
நித்ய நிர்மலா; நிஷாத வீரியா; சரணம் ஐயனே!
============================================
                                                             (நித்ய) (சத்ய) 
விண்ணி லுலவிடும் வெள்ளி யுருவெனும் வீரையனே;
தண்கரங் காட்டியே கட்டி யிழுத்திடுந் தர்மையனே; 
மண்ணில் பொழிந்திடு கொண்ட லனையநல் மாதையனே;
கண்ணி லுறைந்தெனை யென்றுங் கவர்த்த கமலையனே! 
                                                             (கண்ணி) (சத்ய)

அன்பைப் பொழிந்திடு(ம்) அன்னை யுருவெனு(ம்) அன்பையனே;
கன்னற் சிரிப்புடன் பிள்ளை வடிவெனுங் கன்னையனே;
பொன்னின் நிறத்துடன் நித்த மொளிர்ந்திடும் பூதையனே;
மின்னல் வடிவினில் என்னில் புகுந்திடும் வேதையனே; 
                                                             (மின்னல்) (சத்ய)

சின்னக் குழல்தருந் மென்மை யிசையெனுஞ் சீரையனே;
இன்னல் துயர்களை யென்றும் அறுத்திடும் ஏறையனே; 
தன்னைத் தருமுயர் தாய்மை யெனுமருந் தங்கையனே;
என்னில் நிறைந்தெனை யென்றும் வளந்தரும் என்னையனே! 
                                                             (என்னில்) (சத்ய)
==============================================
இராச. தியாகராசன் 

குலங்காக்க வாராரே ஐயனாரு.....

ஒரு ஐயப்ப பஜனையில் ஒரு ஐயப்பன் பக்தர் பாடிய ஐயனார் பாடலின் நான்கு வரி மெட்டின்  தாக்கத்தால் முழுவதும் என்னுளத்தில் முகிழ்ந்து, நானெழுதிய  வரிகளிவை.  முதல் அடியான "வெள்ளைக் குதிரையிலே ஐயனாரு" என்று அவர் பாடிய வரியைச் சற்றே மாற்றி "வெள்ளக் குருதையிலே ஐயனாரு" என்று தொடங்கி, முழுதும் நாட்டுபுற வரிகளாக எழுதினேன். 
=======================================













குலங்காக்க வாராரே ஐயனாரு
=======================================
ஐயனாரு ஐயனாரு ஐயனாரு ஐயனாரு
எங்ககுலங் காக்கவரார் ஐயனாரு....
=======================================
வெள்ளக் குருதையிலே ஐயனாரு
வெரசாத்தான் வாராரே ஐயனாரு
துள்ளுங் குருதையிலே ஐயனாரு
துடிப்பாத்தான் வாராரே ஐயனாரு!                    (ஐயனாரு) 

அள்ளு மழகுடனே ஐயனாரு
ஆடித்தான் வாராரே ஐயனாரு;
பொள்ளுகின்ற புல்லரையே ஐயானாரு
பொசுக்கத்தான் வாராரே ஐயனாரு!                 (ஐயனாரு) 

சின்னக் குருதையிலே ஐயனாரு
சீறித்தான் வாராரே ஐயனாரு
மின்னுங் குருதையிலே ஐயனாரு
வீரமாத்தான் வாராரே ஐயனாரு!                       (ஐயனாரு)

பண்ணக் குருதையிலே ஐயனாரு
பாய்ஞ்சுதான் வாராரே ஐயனாரு;
வண்ணக் குருதையிலே ஐயனாரு
மாயமாத்தான் வாராரே ஐயனாரு!                   (ஐயனாரு)

காட்டுக் குருதையிலே ஐயனாரு
கருக்காதான் வாராரே ஐயனாரு
நாட்டுக் குருதையிலே ஐயனாரு
நலுங்காம வாராரே ஐயனாரு!                            (ஐயனாரு)

மாயக் குருதையிலே ஐயனாரு
மலைபோல வாராரே ஐயனாரு
சூரக் குருதையிலே ஐயனாரு
சோக்காத்தான் வாராரே ஐயனாரு!                 (ஐயனாரு)

பாலக் குருதையிலே ஐயனாரு
பாடித்தான் வாராரே ஐயனாரு
கோலக் குருதையிலே ஐயனாரு
குதிச்சேதான் வாராரே ஐயனாரு!                    (ஐயனாரு)

செருவக் குருதையிலே ஐயனாரு
சிட்டாத்தான் வாராரே ஐயனாரு
கருத்த குருதையிலே ஐயனாரு
காத்தாத்தான் வாராரே ஐயனாரு!                   (ஐயனாரு)

பாசக் குருதையிலே ஐயனாரு
பறந்துதான் வாராரே ஐயனாரு
ஆசைக் குருதையிலே ஐயனாரு
அழகாத்தான் வாராரே ஐயனாரு!                    (ஐயனாரு)

தங்கக் குருதையிலே ஐயனாரு
தாவித்தான் வாராரே ஐயனாரு
சிங்கக் குருதையிலே ஐயனாரு
சிலுப்பிகிட்டு வாராரே ஐயனாரு!                    (ஐயனாரு)
====================================
இராச. தியாகராசன்.