ஞாயிறு, 2 ஜனவரி, 2022

சத்ய விரதனே; தர்ம பாலகா....

என்னில் உறைந்தெனை என்றும் வளந்தரும் என்னய்யனே...
============================================













============================================
சத்ய விரதனே; தர்ம பாலகா; சரணம் ஐயனே!
நித்ய நிர்மலா; நிஷாத வீரியா; சரணம் ஐயனே!
============================================
                                                             (நித்ய) (சத்ய) 
விண்ணி லுலவிடும் வெள்ளி யுருவெனும் வீரையனே;
தண்கரங் காட்டியே கட்டி யிழுத்திடுந் தர்மையனே; 
மண்ணில் பொழிந்திடு கொண்ட லனையநல் மாதையனே;
கண்ணி லுறைந்தெனை யென்றுங் கவர்த்த கமலையனே! 
                                                             (கண்ணி) (சத்ய)

அன்பைப் பொழிந்திடு(ம்) அன்னை யுருவெனு(ம்) அன்பையனே;
கன்னற் சிரிப்புடன் பிள்ளை வடிவெனுங் கன்னையனே;
பொன்னின் நிறத்துடன் நித்த மொளிர்ந்திடும் பூதையனே;
மின்னல் வடிவினில் என்னில் புகுந்திடும் வேதையனே; 
                                                             (மின்னல்) (சத்ய)

சின்னக் குழல்தருந் மென்மை யிசையெனுஞ் சீரையனே;
இன்னல் துயர்களை யென்றும் அறுத்திடும் ஏறையனே; 
தன்னைத் தருமுயர் தாய்மை யெனுமருந் தங்கையனே;
என்னில் நிறைந்தெனை யென்றும் வளந்தரும் என்னையனே! 
                                                             (என்னில்) (சத்ய)
==============================================
இராச. தியாகராசன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக