வியாழன், 21 நவம்பர், 2019

வேதனை போகும்... தெளிவாகும்...

20.11.2015 அன்று, புதுச்சேரி பாவலர் பயிற்சிப் பட்டறையில் கலைமாமணி, தமிழ்மாமணி, திரு கல்லாடனார், கலைமாமணி, தமிழ்மாமணி திரு இலக்கியனார் ஆகியோர் முன்பாகப் படிக்க வேண்டுமென நினைத்து வனைந்த காவடிச் சிந்து வரிகள் இவை. என்னவோ தெரியவில்லை; எனக்கு நிறைவில்லை என்பதால், வேறு ஒரு பாடலைப் படித்தேன் அன்றைக்கு.
=============================










================================
வேதனை போகும், தெளிவாகும்...
================================
உள்ள மெழுந்திடுஞ் சந்தம் - அறந்
துள்ளு மழல்வரி பந்தம் - உளம்
.....படர்ந்தேகவி புனைந்தேதர பொழிந்தேவரு தமிழ்மீதொரு
..........பாசம்
..........அதன்
..........நேசம்.

வெள்ளை யணிந்துரு கொள்ளுங் - கறுங்
கள்ளை யருந்துயிர் துள்ளும் - பிழை
.....யழிந்திக்கண மெழுந்தப்பழி விழுந்திப்புவி யமிழ்தச்சுவை
..........யாகும்
..........சினம்
..........போகும்.

துள்ளும் பெருங்கடல் மேவி - கரும்
புள்ளுந் தருந்துயர் தாவி - வருஞ்
.....சுழலென்னுளக் கருவில்முளைத் தெழுகுஞ்சுடர்ப் பெருகும்வெளித்
...........தோற்றம்
...........அவள்
...........சீற்றம்.

வண்ணத் தமிழ்தருஞ் சிந்தை - தின
மெண்ணப் பிறந்திடும் விந்தை - வள
.....மிழிந்தேயுளங் கவர்ந்தேவளர் நறவேநிகர் தமிழ்தானொரு
..........யின்னல்
..........தகர்
..........மின்னல்.

கொள்ளத் தருமொரு மோகம் - கர
மள்ளப் புகுமொரு தாகம் - துளி
.....திறந்தேவரு மறிவேயதி லறிந்தேயுரு கலதேகிடுஞ்
..........சித்தம்
..........பெரும்
..........பித்தம்.

குற்றங் குறையது தேய - நிதஞ்
சுற்றுங் கறையது சாய - பெரும்
.....புவிமீதினில் சுழலாயெனை யெழுவாதுயிர் தருவேதனை
..........போகும்
..........தெளி
...........வாகும்.
==============================================
இராச. தியாகராசன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக