புதன், 27 ஏப்ரல், 2022

முள்முடித் தொற்று...

முள்முடி நுண்மித் தொற்று கற்றுத் தந்த பாடங்கள்...
==========================================

=========================================
எச்சரிக்கை எச்சரிக்கை...
========================================= 
ஓங்கலெலாம் எனதென்று கொக்க ரித்தே,
.....உள்ளதெலாம் என்வசமென் றூளை யிட்டு,
ஆங்கொளிரும் அறிவியலின் ஆற்றல் கொண்டே,
.....அடவிகளை அழித்தழித்தே ஏற்றம் கண்டு,
தீங்கிழைக்கும் அணுகுண்டின் சீற்றம் ஆர்க்க,
.....தீய்த்துவிடும் ஏவுகணை பலவும் சேர்த்து,
பாங்கெழிலாய் அண்டவெளிக் கோல மிட்டு,
.....பார்போற்றும் நிலவுக்கும் பாலம் செய்தாய்!

ஒருகணத்தில் மறைந்துவிடும் குமிழைப் போல,
.....உயிர்க்குருவிக் கூட்டைவிட்டே பறந்து நாளும்
எரிந்துவிழும் பிணக்குவியல் சொல்லு கின்ற 
....இன்றுலக நுண்தொற்றின் பாடம் என்ன?
கரியமனக் காலனென கண்ட தையும்
.....கருக்கிவிடும் மாந்தர்க்கு மெச்ச ரிக்கை;
நரம்பின்றி நாடோறும் பேசி ஏய்க்கும்,
....நயங்கெட்ட அரசியலார்க் குமெச்ச ரிக்கை!

பெருந்தாதா போல்சின்ன நாட்டை தீய்க்கும் 
.....பேர்கொண்ட நாடுகட்கும் எச்ச ரிக்கை:
தெரிந்துநிதம் இறைவனையே நம்பும் பேரை,
.....சிந்தனையின் றிமதத்தால் ஆள எண்ணும்,
விரிந்துபரந்த வன்முறையே விதியாய்க் கொண்ட,
.....மதவாதத் தருக்கருக்கு மெச்ச ரிக்கை;
தரமுயர்ந்த பாரதத்தில் சாதி யென்று
....தாழ்ந்தவரை மிதிப்பவர்க்கு மெச்ச ரிக்கை!
=========================================
இராச. தியாகராசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக