ஞாயிறு, 6 நவம்பர், 2022

கவியெனச் சாற்றினனே.....

தளிர்த்தே அழிந்த கனவுக் கவிதை, 
பொலிந்தே அழிந்த கவிதைக் கனவு......

==================================











==================================
கவியெனச் சாற்றினனே.
(கட்டளைக் கலித்துறை)
=======================
வளமும் விளங்க நிலத்தை நனைத்திடும் வான்மழையே; 
தெளிந்த நிலவில் நினைவை மயக்கிடும் தெண்டிரையே; 
ஒளியா லுலகி னுயிர்கள் வளர்த்திடும் வெங்கதிரே; 
தளிர்த்தே அழிந்த கனவைக் கவியெனச் சாற்றினனே!

மலர்ந்து மணந்தே மனத்தை கவர்ந்திடும் மல்லிகையே;
சிலிர்த்து நிதமும் சிந்தையை அள்ளிடுமச் செம்மலரே;
மலிந்த பரிவால் என்னை அணைத்திடும் மதிமுகமே; 
பொலிந்தே அழிந்த கனவைக் கவியெனப் போற்றினனே!
======================================================
இராச. தியாகராசன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக