அனைவர்க்கும் இனிய உழவர்த் திருநாள், தமிழர்த் திருநாள், பொங்கல் திருநாள், திருவள்ளுவர் நாள் வாழ்த்துரைக்கிறேன். வாழிய வளத்துடன் பல்லாண்டு.
=========================================
=========================================
வாழ்த்துதரும் நாளிதுவே....
==================================================
வெள்ளிநிற மலைமுகட்டு வியன்தமிழின் நாளிதுவே;
வெள்ளிநிற மலைமுகட்டு வியன்தமிழின் நாளிதுவே;
கள்ளமிலா தன்புமிளிர் கனித்தமிழின் நாளிதுவே;
பள்ளுடனே பாடிமகிழ் பைந்தமிழின் நாளிதுவே;
தெள்ளுறுதித் தூயமனத் தென்தமிழின் நாளிதுவே!
கண்மயங்கக் காதலரும் களிக்கின்ற நாளிதுவே;
வெண்ணிலவு நங்கையரும் விழைகின்ற நாளிதுவே;
பண்ணிலங்கக் காளையரும் பாடுகின்ற நாளிதுவே;
எண்ணமுறை தீந்தமிழில் இசைக்கின்ற நாளிதுவே!
மண்ணுலகின் மருவில்லா வண்டமிழின் நாளிதுவே;
தண்ணிலவாய் ஒளிவீசும் தண்டமிழின் நாளிதுவே;
நண்ணுகின்ற நல்லறத்து நற்றமிழின் நாளிதுவே;
உண்மையொளிர் ஆற்றலுறை ஒண்டமிழின் நாளிதுவே!
துள்ளிவருங் காளையுடந் தூதுவிடும் நாளிதுவே:
அள்ளிவளர் அன்னைமகிழ் ஆர்தமிழின் நாளிதுவே;
புள்ளியிடுங் கோலமெழிற் பொங்கலிடும் நாளிதுவே;
வள்ளையொடு கும்மியுடன் வாழ்த்துதரும் நாளிதுவே!
====================================================
இராச. தியாகராசன்
பிகு:
====
பள்ளு - ஆனந்தப் பாட்டு, பைந்தமிழ் - பசுமை+தமிழ், வண்டமிழ் - வளமை+தமிழ், தண்டமிழ் - தண்மை+தமிழ், நற்றமிழ் - நல்ல+தமிழ்,
ஒண்டமிழ் - ஓண்மை+தமிழ், தெள்ளுறுதி - தெளிந்த உறுதி, நண்ணுகின்ற - பொருந்துகின்ற, (வள்ளை/பள்ளு/கும்மி/தெம்மாங்கு - சிந்துப்பா வகையின).
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக