செவ்வாய், 23 ஜனவரி, 2024

வேய்குழல் மாயவா...

"என்னையா ஒரே சிவன் பாட்டாப் பாடியறுக்கிறாயே, உனக்கு இராமனையும்/ விஷ்ணுவையும் பாடவே தெரியாதா," என்று வலதுசாரி அன்பரொருவர் "அன்பாகவும் அறிவாகவும்" எனைப்பாடி வறுத்ததால், "அரியும் அரனும் ஒண்ணு, அறியாதவர் வாயிலே மண்ணு," என்று சொல்லி, இப்பாட்டை எழுதினேன். இனி வரும்நாளில், அந்தப் பாலாழி ஶ்ரீபத்மநாபனே நம்மையும், நம்மக்களையும், நம்நாட்டையும் காத்திடவே வேண்டுகிறேன்.
=========================================












=========================================
பாலாழி பத்மநாபா...
====================
சூதனும் பொற்கதிர்த் தூரிகை ஏந்தியே சோதியாய்க் காட்டிடுஞ் சுந்தர நந்தனே; நாதமாய் வேணுவும் நளினமாய் ஒலித்திடக் கோதுளம் காக்குமெம் குழலிசை விந்தனே! கமலினி பற்றிடும் கனிந்தகார் வண்ணனே; எமதுளம் உற்றிடும் எழிமிகு கண்ணனே; திமிரிலே உழல்நிலை தீய்க்குநர சிம்மனே; சமரிலே வென்றயெம் கோகுல மன்னனே! யாதவர் ஏத்திடும் இன்முகத் தூயனே; பூதலம் போற்றிடும் பூமகள் நேயனே; சீதளத் திருமகள் சீந்திடும் மாலனே; மேதினி காக்குமெம் வேய்குழற் கோலனே!
===============================
இராச தியாகராசன்

பிகு:
====
சூதன் - சூரியன், கோதுளம் - வெற்றுப்பதரான உளம், கார்வண்னன் - நீல மேக சியாமளன், சீந்திடும் - போற்றிடும்/ ஏற்றிடும், வேய்குழல் - மூங்கிற் புல்லாங்குழல்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக