சனி, 19 அக்டோபர், 2019

என்னையே தந்தேன்.....

ஒரு சந்தப் பாடல் மாறுதலுக்காய்....

(கீழிருக்கும் ஓவியம் ஓவியர் திரு இளையராஜா அவர்களின் அற்புதக் கைவண்ணம்.)

================================














================================
என்னையே தந்தேனடி.....
========================

எடுப்பு:
=======
கண்ணாலே உனைக்கண் ட துமே! - பெண்ணே
எண்ணாம லென்னையே தந்தேன்!

தொடுப்பு:
==========
கண்ணிலே கண்டேனக் கயலென்னும் குமுதம்;
நெஞ்சிலே உண்டேனவ் வெழிலென்னும் அமுதம்!

முடிப்பு:
=======
வானத்து மாமழை யாலே - தோகை
மயிலிங்கே ஆடுதல் போலே
கானத்தைத் தேன்குர லாலே - கூவிக்
களித்திடுங் கருங்குயில் போலே;  (கூவிக்) (கண்ணாலே)

பேசிடுங் கண்ணொ ளியாலே - என்றன்
சித்தமுங் கலங்கிட நாளும் 
ஆசையைத் தூண்டுகின் றாயே! - உன்றன்
அசைந்தா டுமிடை யதனாலே!   (உன்றன்) (கண்ணாலே)

நீரெல்லைத் தொடுவது போலே - கண
நேரத்தில் மறைவது மேனோ?
வேரிலா மரமது போலே - மனம்
வீழ்வதைப் புரியாத தேனோ?   (மனம்) (கண்ணாலே)

கார்பொழி பின்னலை நீயும் - சுற்றிக்
கடந்திடும் வேளையில் நானோ;
பார்வையின் வீச்சதா லேயே - வெற்றுப்
பதுமைபோல் ஆவது மேனோ?  (வெற்று) (கண்ணாலே)

விண்ணிலே லூர்ந்திடு நிலவாய் - நீயும்
மென்மையாய்ச் சிரித்திடு வேளை,
கண்ணெனும் வலையிலே மீனாய் - நானும்
கருக்கிலே ஆழ்வது மேனோ? (நானும்) (கண்ணாலே)
===================================
இராச. தியாகராசன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக