திங்கள், 21 அக்டோபர், 2019

கொடுமைகளும் வந்ததேனோ?....

அறமில்லா அறிவிலிகள் நிறைந்த உலகமோயிது?  😩

===================================













===================================

கருத்தமனக் கொடியவர்கள் சின்னப் பூவைக்
.....கசக்கிநுகர் கயமைகளும் வளர்ந்த தேனோ?
குருத்துநிகர் மழலைதன்னைச் சிதைப்போர் கூட
....கொழுந்தினிலே அன்னைமடி யிருந்தோர் தாமே?
அரக்கரென அடுக்கடுக்காய்ப் பிழைகள் தம்மை
....அனுதினமும் அளவின்றிச் செய்வோர் கூட
சிரித்தபடி தாயவளும் அன்பாய் ஊட்டும்
....சிறப்பமுதை அருந்திநிதம் வளர்ந்தோர் தாமே?

ஊழ்த்துவரும் உயிர்கட்கே உலகின் தாய்மை
.....உதிரத்தால் வழங்குகின்ற சின்ன மிங்கே
ஆழ்ந்துருகித் தாயவளே வழங்கும் அன்பின்
.....அகண்டவெளித் தத்துவமாம் உண்மை யிங்கே
தாழ்த்தலிலா தாய்மையுள்ளம் மொழிகள் தாண்டி,
.....தனதுதிரம் கடைந்தருளும் அமுத மிங்கே,
வாழ்க்கையிலே தலைமுறையை வளர்த்தே என்றும்
.....மங்கைநலம் காத்திடவே வேண்டு மம்மே!
=====================================
இராச. தியாகராசன்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக