செவ்வாய், 18 அக்டோபர், 2022

பாப்புதுவை வாழியவே....

 நற்புதுவை வாழியவே; கவிப்புதுவை வாழியவே; பாப்புதுவை வாழியவே!

=====================================









=====================================
எம்புதுவை வாழியவே....
=======================
திரையொலிக் கடல்போற் றிகழ்ந்திடுந் தமிழிலே
வரைந்திடும் வண்ணமாய், வள்ளையாய்ச் சிந்துமாய்,
நரையறா இலக்கணஞ்சேர் நற்கவிதை நான்வனைய,
கரையிலா இலக்கியக் கவிப்புதுவை வாழியவே!

நிறைவான இலக்கியமும், நேர்த்திமிகு இலக்கணமும்,
நறுந்தேனாய்ப் பொலிகின்ற நாவினிக்கும் பாட்டியலும்,
அறம்பொருள் இன்பவியல் அத்தனையும் நானெழுதச் 
சிறப்புடனே மின்னுகின்றச் சீர்புதுவை வாழியவே!

தீவானச் செந்தழலாய்த் தீந்தமிழிற் சொல்லெடுக்கித் 
தூவானச் சாரலென தொல்தமிழில் பன்னூறாய்
நாவார நற்கவிதை நாடோறும் நான்புனைய
பாவானம் போலொளிரும் பாப்புதுவை வாழியவே! 
======================
இராச. தியாகராசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக