வியாழன், 21 ஆகஸ்ட், 2014

தூர்த்திட வேண்டும் துணிந்து.....

தூர்த்திட வேண்டும் துணிந்து...
(கலி வெண்பா)
============================
 





 
 
 
 
 
 
 
============================
நேர்மையே அற்றவோர் நீணில வாழ்விலே
சோர்வதும், சோகமும், தோல்வியும் ஏணியே!
ஆரெமைக் காத்திடும் ஆண்டவன் என்றுளக்
கூரது மங்கிய கொள்கையில் மாய்வதோ?

பறந்திடும் எல்லாம் பறவையா என்றும்,
துறந்திடும் மாந்தர்த் துறவியா என்றும்,
உறவுகள் யாவுமே உண்மையா என்றும்,
அறுதியாய் எங்ஙனம் ஆய்ந்தே அறிவதோ?

மூர்க்கரும் நெஞ்சினில் மோகமே விஞ்சிட
ஆர்த்திடும் பிஞ்சதன் ஆயினைத் தீய்ப்பதோ?
ஊரதைச் சுற்றிய ஊத்தையை சாய்த்திட
யாரெவர் வேண்டும்? எழுந்திடு மானிடா!

பாரதம் பற்றிய பாம்பாம் புரையிதைத்
தூர்த்திட வேண்டும் துணிந்து.
==============================
ஆய் = எழில்
ஊத்தை = பெருங்கேடு
புரை = வளர்தீமை
தூர்த்தல் = அழித்தல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக