வியாழன், 21 ஆகஸ்ட், 2014

மெய்யான மெய்....

மெய்யான மெய்......
(எண்சீர் விருத்தப் பா)
===========================================
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
===========================================

 பூங்கிளையிற் போந்துவரும் தென்றல் காற்று;
.....பூவையரின் பூத்தொளிரும் அன்பின் ஊற்று;
யாங்கணுமே தோன்றிநமை மோதுந் துன்பம்;...
.....யாவருமே ஏங்குகின்ற காத லின்பம்;
ஓங்கிவளர் ஓங்கலதன் உயர்ந்த ஒண்மை;
.....ஊரெழவே ஊழ்த்துவரும் கதிரின் வெண்மை;
ஈங்கனைத்தும் வாழ்வினிலே நிலைப்ப துண்டோ?
.....ஏற்றமிகு மெய்யதுதான் உயிர்க்கு மிங்கே!
===========================================
 
ஓங்கல் = மலை/குன்று
ஊழ்த்து = தோன்றி/உதித்து
ஒண்மை = ஒளிர்வு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக