செவ்வாய், 19 ஆகஸ்ட், 2014

நற்சூதனைப் பாடுவோம்...

நற்சூதனைப் பாடுவோம்  (கலிவிருத்தம்)
====================================

 




 

 
 
 
 
 
 
 
 
 
 
 
================================================
கிருஷ்ண கிருஷ்ண ஹரி; கிருஷ்ண கிருஷ்ண ஹரி;
கிருஷ்ண கிருஷ்ண ஹரி.... மாலவா!
கிருஷ்ண கிருஷ்ண ஹரி; கிருஷ்ண கிருஷ்ண ஹரி;
கிருஷ்ண கிருஷ்ண ஹரி.... கேசவா!                                    (கிருஷ்ண)

மாலவா, மாயவா, ஶ்ரீதேவி நாயகா...
மாதவா, கேசவா, நவநீத மோகனா!                                      (கிருஷ்ண)

பூதலம் ஈர்த்திடும் பொம்மலாம் தூயவன்;
மாதவ கோபியர் மன்பதை நாயகன்;
யாதவர் சீந்திடும் இன்முக மாயவன்;
ஆதவன் போற்றிடும் ஆய்நிறை மாதவன்!                        (கிருஷ்ண)
 
பாமரர் வாழ்ந்திடப் பாழதும் மாய்ந்திடத்
தீமையும் தீய்ந்திடத் தீயவர் சாய்ந்திடக்
கோமகள் பாலனின் கோகுல வாசனின்
நாமமும் பாடியே நாட்டியம் ஆடுவோம்!                            (கிருஷ்ண)
 
வாடிடும் மாந்தரின் வாழ்வினைத் தாங்கிட
நாடிடும் பாவலர் நாநலம் ஓங்கிடப்
பாடியே பாமலர் பாக்களால் கோதையும்
சூடியே தந்தநற் சூதனைப் பாடுவோம்                                (கிருஷ்ண)
=========================================
பூதலம் = புவியகம்
பொம்மல் = எழில்
மன்பதை = புவியகம்
சீந்திடும் = போற்றிடும்
ஆய்நிறை = அழகுநிறைந்த
நற்சூதன் = மதுசூதன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக