ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2014

தேவிநீ எமைத் தேடிவா......



தேவிநீ எமைத் தேடிவா......
===========================================

  












============================================
ஆதியே எமை ஆளவா:
காளியே எமக் காகவா;
தேவியே எமைத் தேடிவா;
தாவிநீ சுமை தாங்கவா!
.....தாவிநீ சுமை தாங்கவா!
                                                           (ஆதியே)

வானில் ஏறி மறையும் போதும்
தேனில் ஊறித் திகழும் போதும்
ஊனும் நாறி உழலும் போதும்
நானும் மாறி நழுவும் போதும்
..... நானும் மாறி நழுவும் போதும்
                                                           (ஆதியே)

தேடித் தேடி தேய்ந்த போதும்
ஆடி யோடி அலைந்த போதும்
பாடிப் பாடி பறந்த போதும்
ஓடி யாடி ஓய்ந்த போதும்
.....ஓடி யாடி ஓய்ந்த போதும்!
                                                           (ஆதியே)

நாடு விட்டே நலிந்த போதும்
கூடு விட்டே குலைந்த போதும்
பாடு பட்டே படுத்த போதும்
சூடு பட்டே சுருண்ட போதும்
.....சூடு பட்டே சுருண்ட போதும்!
                                                            (ஆதியே)

நித்தம் சாடும் நிகழ்வின் போதும்
சித்தம் தேடும் சிதைவின் போதும்
முத்தம் நாடும் முனைவின் போதும்
அத்தம் கூடும் அழலின் போதும்
.....அத்தம் கூடும் அழலின் போதும்!

                                                            (ஆதியே)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக