வியாழன், 21 ஆகஸ்ட், 2014

பெருந்தலைவர்....

பெருந்தலைவர்...
(கொச்சகக் கலிப்பா)
==================================================
















==================================================

நேர்மையினை எளிமையினை நீதியென உரைத்திடுமுன்
கூர்ந்தாய்ந்தே தம்வாழ்வில் கொள்கையெனக் கொண்டதனால்
ஆர்த்தெழுந்தே அன்றிளையோர் அப்பெருந் தீரரையே
பார்முழங்கத் தம்தலையாய்ப் பாங்குடனே ஏற்றனரே!

கொள்ளியென எரிக்குமந்த கொடும்பசி யடங்குமெனில்
வெள்ளியாய் ஒளிர்கின்ற வியன்கல்வி விளங்குமென்று
பள்ளியிலே பாலகர்க்குப் பகலுணவு தந்தவரின்
உள்ளன்பை எவரிங்கே உண்மையாக உணர்ந்திடுவார்?

உன்னருகில் அன்றொருநாள் உணவருந்தி நின்றதையே
என்னிதயம் எண்ணியிங்கே எந்நாளும் விம்முவதை,
அன்பிழிய நீயன்றே அளித்திட்ட அரவணைப்பை,
இன்றிளையோர் உணர்ந்திடவே எடுத்தியம்ப இயலவில்லை!

கல்வியிலாக் கர்மவீரன்; கருணைமிகு தர்மசீலன்;
தில்லிவாழ் அரசியலுந் தேடிவந்தே வேண்டிநின்ற
நல்லவரே நீரிங்கே நலமுடனே இருந்திருந்தால்
புல்லருமித் தமிழினத்தைப் பொசுக்கிவிட ஏலுமோ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக