சனி, 21 செப்டம்பர், 2019

சூழ்பகையும் தூள்....

நங்கையர் நாளுக்காய் நானெழுதிய வரிகளிவை...
================================================
================================================
சூழ்பகையும் தூள்....
================================================
வெங்கரத்தால் செம்பரிதி வெள்ளிமலை பற்றுதல்போல்,
செங்கமலக் கன்னியரே சீறுகின்றச் - சிங்கமென,
ஞாலத்தின் நீதிக்கிஞ் ஞாட்பென்றே கூவிநின்றால்
சூலுறுஞ் சூழ்பகையுந் தூள்.

ஆலறுகாய் வாழ்ந்திங்கே ஆற்றலுடன் ஆட்சிசெய்து,
காலனென நம்மினத்தைக் காத்துநின்றே  - வேல்கொண்ட
வேலம்மை நாச்சியென வேல்விழியர் வீறுகொண்டால்,
சூலுறுஞ் சூழ்பகையுந் தூள்.

செம்புலத்தின் சீர்மையெனத் தீச்சுடரா(ய்) ஆர்க்கின்ற
எம்மினத்து நங்கையெனும் இன்முகமே! - அம்பலத்தில்
வாலெழிலார் மங்கைநீ வாளெடுத்தால் காமுகத்தின்
சூலுறுஞ் சூழ்பகையுந் தூள்.
=================================================
இராச. தியாகராசன்.

பிகு:  ஞாட்பு = போர்க்களம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக