ஞாயிறு, 22 செப்டம்பர், 2019

வாழ்வியல் விதி....

உங்களின் உன்னதமான மன்னிக்கும் பண்பை மட்டும் கைவிட்டு விடாதீர்கள்.  ஏனென்றால் உங்களின் உள்ளத்தைத் துன்புறுத்தும் நினைவுகளுக்குரியவர், இன்னமும் இடைவிடாதுங்களை உளமார நேசித்துக் கொண்டிருக்கலாம். (இப்பண்பைத் தொலைத்ததனாற்றான், பிரிவென்று வரும் போதில், ஆண்களும்/ பெண்களும், தாம் நேசித்தவர்/ தமை நேசித்தவர் மீதில் வன்மமும், வெறுப்புமுற்று, வேண்டத்தகாதனவற்றை மேற்கொள்கின்றனர்!)

====================================



====================================

விரைந்தும் போகலாம் - உனை
வெறுத்தும் போகலாம்;
விளம்பியும் போகலாம் - தனை
விளக்கியும் போகலாம்!

மரத்தும் போகலாம் - மெய்
மறந்தும் போகலாம்;
தெரிந்தும் போகலாம் - பொய்
சொரிந்தும் போகலாம்!

வருந்தியும் போகலாம் - வளம்
விரும்பியும் போகலாம்;
அறிந்தும் போகலாம் - உளம்
அழுதும் போகலாம்!

கரித்தும் போகலாம் - மனம்
கலங்கியும் போகலாம்;
பறந்தும் போகலாம் - தினம்
பழகியும் போகலாம்!

புரிந்தும் போகலாம் - பழி
புனைந்தும் போகலாம்;
சிரித்தும் போகலாம் - வழி
சிதைத்தும் போகலாம்!

அறிந்தும் போகலாம் - நினை(வு)
அழித்தும் போகலாம்;
கடிந்தும் போகலாம் - கரை
கடந்தும் போகலாம்!

===================================
இராச. தியாகராசன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக