சனி, 21 செப்டம்பர், 2019

இன்பங் கொள்ளல் ஏனடா?.....

வாழ்க்கையே ஒரு நிழற்படமோ?....
==================================
==================================
இன்பங் கொள்ளல் ஏனடா...
==================================
முட்டி மோது(ம்) உள்ளமே
....மோக(ம்) என்ன போதையா?
வெட்டிப் பேச்சுக் கள்ளமே
....வெற்று மோசப் பாதையா?
கட்டித் தங்கம் காட்டிலே
....காய்ப்ப துண்டோ பாரடா?
எட்டிக் காயி(ல்) என்றுமே
....இன்பங் கொள்ள(ல்) ஏனடா?

விட்டுச் சென்ற நாளையே
....வேண்டி வேண்டித் தேடியும்,
துட்டு மட்டும் வாழ்வெனச்
....சொக்கி யிங்கே ஆடியும்,
அட்டி யின்றித் தீமையை,
....ஆசை யோடு கூடியும்,
முட்டி மோதும் வாழ்விலே
....மோகங் கொள்ள(ல்) ஏனடா?
==============================
இராச. தியாகராசன்

பிகு: அட்டியின்றி - தடங்கலின்றி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக