வியாழன், 19 செப்டம்பர், 2019

வேதம் புதிதாய் விதை....

இற்றைக்கு நாட்டின் நிலையெண்ணி, என்றோ மறந்து போன தூரிகையையைத் தொட்டு, இன்றைய காரிகைக்காக நேற்றெழுதிய வரிகள்......

===================================



===================================
வேதம் புதிதாய் விதை....
=======================
மனத்தில் நிறைந்தவன் மாண்பிலா னாகிக்
கணத்தில் மறைகிறான் காண்பாய்! - உனக்கினி
பாதந் தொடுவழி பாதையா யாகிட
வேதம் புதிதாய் விதை.

மங்கையுன் கற்பினை மாய்த்திட நாளுமே
இங்கவன் வேடமே ஏற்கிறான்! - சங்குக்
கழுத்தைப் பிடித்த சுருக்குக் கயிற்றைச்
சுழற்றியே வீசிச் சொடுக்கு.
=========================
இராச. தியாகராசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக