சனி, 21 செப்டம்பர், 2019

வைகறை...

வைகறை போதென்னும் மங்கையவள் என்னெஞ்சில் ஏற்றி வைத்த நினைவுகள் என்றென்றும் மாறுவதில்லை....

=============================================


=============================================
வைகறை...
===========
முழுநிலவும் விண்ணில் தூங்க,
....முத்தனைய மீன்கள் ஏங்க,
எழிலரும்பும் பூக்கள் மேவி,
....இன்பமெனும் வாசம் தூவ,
வழிந்தலையு(ம்) ஆற்றி லோடி,
....மாருதமாம் மங்கை யாட,
எழுந்திழையும் வண்டும் பாட,
....என்னுளமும் கொள்ளை யாக;

தேனடையின் தித்திப் பாகச்,
....செந்தமிழில் பாட்டுங் கேட்க,
வானிடையே மேகங் கண்டு,
....மாமயிலு(ம்) ஆட்டம் போட,
தானணிந்த காரின் வண்ணச்
....சட்டைகழன் றோடிப் போக,
வானகமே செம்மை யாக,
....வந்தனளே வைக றைதான்!
===============================
இராச. தியாகராசன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக