சனி, 21 செப்டம்பர், 2019

மைந்தனுக்கொரு வாழ்த்து...

மைந்தன் வைகறைச்செல்வனின் 15ஆம் பிறந்தநாளில் அவனுக்களித்த வாழ்த்துரை.......
=====================================



=====================================

ஆர்ப்பரிக்கும் அலைகடலின் முழக்கம் போல,
....அடுக்கடுக்காய்த் தரைமோதும் முயற்சி போல,
சீர்பரப்பும் செந்தமிழின் செழுமை போல,
....தேர்ந்திலங்கு சந்தனத்தின் மணத்தைப் போல,
கூர்ந்தறியும் குறைவில்லா அறிவும் பெற்று,
....கொடுஞ்செயலை வேரறுக்கும் உணர்வு முற்று,
சார்தலில்லாத் தனித்துவமாய் செல்வா நீயும்,
....சழக்குகளும் தான்விலக வாழ்வாய் நன்றே!

=====================================

இராச.தியாகராசன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக