ஞாயிறு, 22 செப்டம்பர், 2019

என்னிலுறைபவளே....

கீழிருக்கும் ஓவியத்தை வரைந்தவர், தமிழகத்தின் தலைசிறந்த ஓவியர்களில் ஒருவரான திரு இளையராஜா அவர்கள் (இசையமைப்பாளர் அல்லர்).

=============================================



=============================================

எண்ணக் கடலது என்று மிரைந்திட,
வண்ணக் கலையினில் மல்லைச் சிலையினில்,
கண்ணன் குழலினில், கன்னற் சுவையினில்
விண்ணுங் கிறுக்கிடும் மின்னற் கொடியினில்,
கண்கள் தொடுவதைக் கைகள் சடுதியில்,
பண்ணாய்ப் புனைந்திட, பாட்டின் "இசையென",
முன்னம் எழுதிய முத்த வரிகளை,
கன்னம் வருடிய காதற் சுவையினை,
இன்பக் கவிதையை, இன்றும் வனைந்திட,
மண்ணில் கவியென என்னைச் செதுக்கியே
என்னி லுறைபவ ளே!

=============================================
இராச. தியாகராசன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக