சனி, 21 செப்டம்பர், 2019

அருந்தமிழே வாழி நீயே......

தமிழை வாழ்த்துவதில் என்ன சிக்கனம்.   தினம் ஒரு பாட்டெழுதிப் பதிந்தாலும் போதாதுதான்....

தமிழே வாழி...
========================================



========================================

மனந்தனிலே மலர்கின்ற கவிதை போல,
....வானுலவுங் குளிர்நிலவின் ஒளியைப் போல,
பனிபடர்ந்த வயல்வெளியின் பசுமை போல,
....பல்லுயிரை வளர்க்கின்ற கதிரைப் போல,
வனமடர்ந்த வழிநிறையும் தனிமை போல,
....வசந்தமன நினைவென்னும் இனிமை போல,
எனதுயிரில் கலந்துறையும் "இசை"யைப் போல,
....எனையாளும் எந்தமிழே வாழி நீயே!

தென்னையதன் ஆடுகின்ற கீற்றைப் போல,
....தேன்கசியுஞ் செங்கனியின் சாற்றைப் போல,
தென்முகத்துத் தென்றலெனுங் காற்றைப் போல,
....தேர்ந்தநறுஞ் செங்கழனி நாற்றைப் போல,
பொன்வண்ணச் செங்கதிரின் ஆற்றல் போல,
....புத்தமிழ்தப் பைந்தமிழின் மாற்றம் போல,
அன்னையெனும் அன்புருவின் தோற்றம் போல,
....அன்றலர்ந்த அருந்தமிழே வாழி நீயே!

============================================
இராச. தியாகராசன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக