வியாழன், 19 செப்டம்பர், 2019

மழலையெனும் மலர்....

ஆம்... வடிவெழில் வாகை மலர், மடியில் முகிழ்ந்த ரோசா, இன்னமிழ்த ஊற்று, பொக்கையிதழ்க் கவிதை,  நம் கவலைகளையெல்லாம் எரிக்கும் மருந்து.
===================================
======================
மழலையெனும் மலர்....
======================
அஞ்சுதலோ மிஞ்சுதலோ ஏதுமற்ற நன்மழலைக்
கொஞ்சுமொழிக் கோலம்! கொடுமை யறியாத
பிஞ்சுமலர் பொக்கையிதழ் புன்சிரிப்பா லென்நெஞ்சில்
வஞ்சமிலா இன்னமிழ்தா(ம்) ஊற்று!

கொடியிற் சிரித்திடும் கொன்றையின் பூவாய்,
மடியில் முகிழ்ந்த மலரின் மணமாய்,
நொடியில் நமையே நுகர்ந்திட வைக்கும்
வடிவெழில் வாகை மலர்.

அன்னையர் தீட்டும் அழகொளிர் ஓவியமாய்க் 
கன்னற் சுவைசேர் கனிமொழிக் காவியமாய், 
விண்முகிற் கூட்டுநல் வேய்குழற் பாவெனக் 
கண்ணையே கட்டுங் கனவு.
==========================================
இராச. தியாகராசன்

பிகு:  வேய்குழல் = மூங்கிற் புல்லாங்குழல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக