ஞாயிறு, 22 செப்டம்பர், 2019

கவிதை செதுக்குகிறேன்..

கீழிருக்கும் படம் தமிழகத்தின் தலைசிறந்த ஓவியர்களில் ஒருவரான திரு இளையராஜா அவர்களின் கைவண்ணம் (இசையமைப்பாளர் அல்லர்)

காதலின் இயல்பே கலையாக உருவெடுக்கிறது; 
கல்லாக இருந்தது சிலையாக உருவெடுக்கிறது!
சொல்லாக நின்றது சுவையாக உருவெடுக்கிறது.
=====================================
=====================================
கவிதைச் செதுக்கிறேன்...
=====================================
என்னி(ல்) உணர்ந்த எழிலாம் திருவெனவே,
தன்னை யறிந்த தகவோர் நடுவினிலே,
முன்னு(ம்) உணர்வில் முகிழ்ந்த உறவெனவே,
என்னில் கவிதை எழுதிட வைப்பவளே!

கனவில் உனதுருவே காண்பது போலவிங்கு
நினைவில் நெருஞ்சியாய் நின்றே உறுத்தல்போல்
மனத்தில் வஞ்சியுன் வடிவான தீயெழிலில்
தினந்தினம் தீராத தீக்குளியல் செய்கின்றேன்

அல்லியின் செவ்வாய் அமிழ்தச் சொல்லழகோ
புல்லிதழ் மீதானப் பூம்பனியாய்ப் போனதால்,
கல்லிலும் காட்சியாய்க் கன்னியுன் தோற்றமே
சில்லித்த வாளியாய் சிந்தையிலே குத்துதடி!

பொன்னி(ன்) ஒளியாய் பொலிந்த கருவெனவே,
எண்ண முழுதும் எழுகுமுன் நினைவினிலே,
மின்னு(ம்) அழகாய் விரிந்த ஒளியெனவே,
சின்னக் கவிதை செதுக்கி யுரைக்கின்றேன்.
=========================================
இராச. தியாகராசன்

பிகு:
====
திரு = செல்வம், 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக