ஞாயிறு, 22 செப்டம்பர், 2019

தோற்பேனோ காதலிலே......

நீர்க்குமிழி போன்ற கவிஞனை நீர் வெல்லலாகுமோ?

=================================================



=================================================

அலைகடலிற் சுழல்கின்ற அமைதியிலாத் திரைபோல,
நிலையின்றி நெகிழ்ந்துருகும் நேச(ம்)உறை நினைவெழுப்பி,
மலைமுகட்டுப் பனியுறையும் வளிக்குளிராய் உளம்பற்றும்,
சிலையழகே! செம்புலத்துச் செந்நீராய் என்றிணைவோம்?

வானகத்தி(ல்) உலவுகின்ற வஞ்சிநிலா என்னெண்ண
மீனுலவும் மனக்குளத்தில் மேய்ந்தெனையே சாய்ப்பதுடன்,
வேனலதன் வாதையென வேதனைகள் பலதந்து,
கானலென ஏய்ப்பதையே காரியமாய்ச் செய்கின்றாய்!

வார்த்தைகளைக் கோத்துகவி வனைகின்ற கவிஞனெனை,
நீர்க்குமிழி போன்றவனை, நீர்வெல்ல லாகாதே!
வேர்வையது நிலம்நனைக்க வேகாத வேனலிலும்
சோர்விலா துழைப்பவன் நான்; தோற்பேனோ காதலிலே?
=================================================
இராச. தியாகராசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக