வியாழன், 26 செப்டம்பர், 2019

கள்ளமாய்ப் பறையுமோ?

2010இல் எழுதிய வரிகளிவை.  பறையும் என்னும் சொல் தூயதமிழ்ச் சொல்.  பறைதல் என்றால் மறைபொருளை ஊரறிய முழவொலித்துக் கூறுதல் என்று பொருள்.
======================================
======================================
கள்ளமாய்ப் பறையுமோ...
======================================
சேற்றிலே மலர்ந்தநற் செந்தா மரையெனத் 
தோற்ற மளித்திடுஞ் சொப்பனத் தோகையே!
பாற்குட வெண்மையாய்ப் பாங்கெழில் மேனியில்,
ஊற்றெனப் பொங்கிடு மோவிய மங்கையே!
போற்றுமிவ் வேழையின் பூமனக் காதலை,
ஏற்றிட வேண்டியே ஏங்குமென் வேதனை
நாற்றிசை மேவியே நங்கையுன் காதினில்,
சாற்றியே சிந்தையிற் சந்தமாய் பதிந்திடக்
காற்றலைத் தூதுவன் கள்ளமாய்ப்  பறையுமோ?
=======================================
இராச. தியாகராசன்.

பிகு:
====
கள்ளமாய்ப் பறைதல் - கிசுகிசுப்பாக காதருகில் சொல்லுதல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக