செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012

குணம் சொலும் நோக்கு.....

நோக்கின்றி வாழ்தலரிது.   நோக்குடனே வீழ்ந்தவரும் அரிது.
============================================












=====================================================

குணம் சொலும் நோக்கு....
=========================
நீள்நோக்கு நேர்மையெனும் நெடுந்நோக்கு இவ்விரண்டும்
மீள்நோக்குக் கூரியதோர் வேல்நோக்கு மற்றிரண்டும்
தாள்நோக்கு வான்நோக்குச் சார்நோக்கு மொத்தமுமே
வாள்நோக்காம் செம்மையெனும் வண்டமிழால் வந்தகுணம்.

சீர்நோக்காம் எரிக்கின்றத் தீநோக்கு இவ்விரண்டும்
வேர்நோக்கு வெட்டவெளி வெறுநோக்கு மற்றிரண்டும்
பார்நோக்குச் சேர்நோக்குப் பன்னோக்கு மொத்தமுமே
நேர்நோக்குக் கூர்நோக்காம் நெடுந்தமிழால் வந்தகுணம்.

வளநோக்கு வாழ்வியலின் மறுநோக்கு இவ்விரண்டும்
களநோக்குக் கருக்கிவிடும் கனல்நோக்கு மற்றிரண்டும்
துளிர்க்கின்றத் துடிப்பானச் சொல்நோக்கு மொத்தமுமே
பளிச்சென்ற பெருநோக்காம் பைந்தமிழால் வந்தகுணம்.

கொல்நோக்கைக் கொன்றழிக்கும் கொடுநோக்கு இவ்விரண்டும்
தொல்நோக்கு நல்லறத்தின் சூழ்நோக்கு மற்றிரண்டும்,
வல்லாட்சி வேரறுக்கும் வன்னோக்கு மொத்தமுமே
வில்நோக்கு விசைநோக்காம் வெல்தமிழால் வந்தகுணம்.
======================================================
இராச. தியாகராசன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக