செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012

முகமூடிகள்.....

முதலில் இதற்கு வேஷங்கள் என்றுதான் தலைப்பிட்டு, முகநூல் அன்பர்களுடன் பகிர்ந்திருந்தேன். மீள்பார்வையில் கவிஞர் ஸ்ரீஸ்கந்தராஜா அவர்கள் வேடங்கள் என்று தமிழ்படுத்தி இருக்கலாமே என்று கருத்துரைத்ததை கண்டேன். வேஷம் என்பது தமிழல்லாத போது திசைச் சொல்லான வேடம் என்பதும் வேண்டாமென, முகமூடிகள் என்று தலைப்பிட்டு விட்டேன்.
=========================================













=========================================
மூகமூடிகள்… (இன்னிசை வெண்பாக்கள்)
======================================

கோடிமலர் பூத்திடுமே கோலமெனக் காவதனில்
ஆடுகின்ற பூக்களிலே அத்தனையும் ஆண்டவனை
நாடிமணம் சிந்திடத்தான் நாளுமின்று நேர்ந்திடுமோ,
தேடியவன் தாள்மீதிற் சேர்ந்து.

முழைநறு பூக்குவையில் மீந்தசில பூக்கள்
குழையர் குழலேறும் கொண்டவனின் கையால்
பிழைத்திட்டக் கூர்முகையில் பேரற்ற பூக்கள்,
விழைவற்று காலடியில் வீண்.

பாடுகுயில் ஆடுமயில் பாசமலர் கோடியெனில்
தேடுமனக் கோணலதால் தேடுவதும் நேர்கையிலே
ஆடிவரும் ஆசையதால் ஆனமனம் வீழ்கையிலே
மூடியெனப் போகும் முகம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக