திங்கள், 6 ஆகஸ்ட், 2012

எதையும் தாங்கும் இதயம்....

திரைப்படப் பாவலர் பூவை. செங்குட்டுவனின்  தலைமையில், கவிதை வானில் மன்றத்தில் வாசித்தளித்த ஒரு/இரு விகற்ப இன்னிசை வெண்பாக்கள்.
==============================================

==============================================


கனிச்சுவை பொங்கு மினிமை இருக்க
பனிக்குளிர் வாளியாய்ப் பாழ்ச்சொற் புனைந்திடும்
காரிருள் கனக்கும் கறுப்பா மிதயமே
ஈரமிலாக் கல்லதற் கொப்பு!

நேராய்ச் சிரிக்கையில் நேயமாய் ஏத்திடும்
பாரா திருக்கையில் பொய்யுரை தூற்றிடும்
சீரிலாச் செருக்கிழிச் சிந்தனை நெஞ்சமே
ஈரமிலாக் கல்லதற் கொப்பு!

பொய்யா மொழியார் புகன்றது போலவே
செய்ந்நன்றி கொன்ற கயவர்தம் பொய்மைகள்
ஆர்த்திடுங் கோண லுரைக்கு மிதயமே
ஈரமிலாக் கல்லதற் கொப்பு!

தடவிப் படிக்குந் தாய்மொழி நூலின்
மடங்கிய தாளின் மடிப்பின் தடச்சொல்
வேரது வடமொழி என்பா ரிதயமே
ஈரமிலாக் கல்லதற் கொப்பு!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக