புதன், 8 ஆகஸ்ட், 2012

காதற்பெண்ணே கானக்குயிலே!.....


இந்தப்பாடல் நான் ஒரு சந்தப் பாடலாக, புதுப்பாவாக 1979இல் எழுதியது. பின்னர் 80களில் அதனை நிலைமண்டில அகவற்பா வடிவில் மாற்றி அமைத்துச் சற்றே மெருகேற்றினேன்.
========================================

========================================
(நிலை மண்டில அகவற்பா)
=========================

காளை என்னைக் காலம் முழுதும்
காக்க வைக்கும் கன்னற் சுவையே!
நாளை என்றன் நாளாய் நானும்
நாளும் வேண்டும் நங்கை நிலவே!
காற்றி லாடும் மலரின் வடிவே!
கருத்தைக் கவரும் காந்தள் கொடியே!
நாற்று வயலின் நெல்லின் அசைவே!
நளினச் சிலையாய்ச் சிந்தும் எழிலே!
நித்தம் என்னை நினைவாம் நெருப்பில்
சித்தம் கலங்க சிரித்தே அழிக்கும்
காதற் பெண்ணே!  கானக் குயிலே!
தூது செல்லும் தோழி யெனவே
சேற்று வயலைச் சீண்டிப் பார்க்கும்
காற்று தேரில் கடுகிச் செல்லும்
வண்ணம் பூசிய மாலை முகிலை
எண்ணம் உதித்த என்றன் இச்சை
தன்னை உனக்கு சொல்ல நானும்
அன்பாய் நிதமும் அனுப்பி வைத்தேன்.
அதையும் நீயே அறிந்தி டாமல்
வதைக்கும் வனிதா மணியே! கேளாய்!
சிதையில் என்னைச் சிரித்தே எரித்த
கதையும் கவியாய்க் காலம் வெல்லும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக