புதன், 8 ஆகஸ்ட், 2012

நம் பெரியார்......


வலையுலாவும் நண்பர்களே!  நான் இறையென்று ஒன்றிருப்பதை நம்புகிறவன்.  அதுபோல இறை  மறுப்பு தவிர்த்து,  பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் குறிக்கோள்கள் பலவற்றை பின்பற்றும் பாமரன்.  இஃது பலருக்கும் முரண்பாடாய்த் தோன்றலாம்.  என்ன செய்வது,  மனித மனம்,  எண்ணங்கள், வாழ்வியல் எல்லாமே முரண்பாடுகளைக் கொண்டவையே!
=======================================================

=======================================================
நம் பெரியார் (கலித்தாழிசை)
============================

சாத்திரங்கள் கூறுவதாய்ச் சாதியெனும் வேதனையைச்
சூத்திரமாய்ச் சொல்பவரை சுட்டெரிக்குஞ் சூரியனாம்;
ஆத்திகரா யில்லாமல் ஆறறிவால் வாழ்வமென,
நாத்திகரா யூர்போற்ற நம்பெரியார் வாழ்ந்தாரே!
..........நானிலத்தோர் போற்றிடவே நம்பெரியார் வாழ்ந்தாரே!

பெரும்பதவிப் பட்டங்கள் பெற்றிடவே வாழ்வில்
செருக்குடனே நாளும் திரிந்தலைந்து நாட்டின்
அரசியலை யாட்டுவிக்கும் அம்மிகளு மாட
கருஞ்சட்டைச் சூறையெனக் காவலனாய் வந்தாரே!
..........கைம்பெண்கள் வாழ்விற்குங் காவலனாய் வந்தாரே!

சொல்லிய சொல்லதனைச் செல்வமென தம்வாழ்வில்
துல்லியமாய்க் காலத்த்தைச் சொத்தெனவே தம்வாழ்வில்
வெல்லுந் தமிழினத்தின் வீரரெனத் தம்வாழ்வில்
நல்லாண்மை மிக்கவராய் நம்பெரியார் வாழ்ந்தாரே!
..........நங்கையரின் மேன்மைக்காய் நம்பெரியார் வாழ்ந்தாரே!

உதட்டிலொன்றும் ஆழ்மனத்தின் உள்ளொன்றும் வைத்தே
விதவிதமாய் சொல்லடுக்கி வெற்றழகைக் காட்டும்
பதங்களையேப் பகராத பண்பதனால் இங்கு
மதயானை போல்நிமிர்ந்து மன்னனென வாழ்ந்தாரே!
..........வாழ்நாளில் தாழ்ந்தோரின் மன்னனென வாழ்ந்தாரே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக