செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012

அவன் வழியிற் திரள்வோம்....

பட்டுக்கோட்டையாரின் பிறந்தநாள் விழாப் பாவரங்கில் நான் பாடிய பாடல்.
==========================================














==========================================
எண்சீர் ஆசிரிய விருத்தம்
(காய்-காய்-மா- தேமா என்ற கட்டமைப்பு)
======================================

நெறியதுவே இல்லாத மிடிமை தன்னை;
…..நேர்மைக்கே பூட்டுமிட்ட அடிமை வாழ்வை;
வறுமையினைத் தனிப்பாவில் சாடும் தீரன்;
…..வாழ்வினிலே நீதியதைத் தேடும் தீரன்!
அறத்துடனே சிறுவர்க்கும் வீரம் சொன்ன,
…..அரசிளங் குமரிப்பா ஒன்றே சான்று!
மறைந்துமுய்யும் கவிஞனவன் கவிதை உள்ளம்;
…..மலர்தோங்கும் வெண்டிரையில் அறிந்தோம் நாமே!

நாமின்று வாய்திறவாச் சிலையா என்று,
…..நாதியற்ற வர்களுக்கே நீதி கேட்டான்;
பூமலர்கள் புகழ்மொழிகள் அனைத்தை யுந்தான்
…..புழுவென்றே தள்ளிவிட்டப் பொதுமை வீட்டான்;
ஊமையென வாழ்ந்திருக்கும் தமிழர் தம்மை,
…..உயர்த்திடவே பலநூறாய்க் கவிதை செய்தான்;
ஆமையெனக் கூடடங்கி இருந்தி டாமல்
…..அவன்வழியில் அணியெனவேத் திரண்டோ மிங்கே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக