புதன், 8 ஆகஸ்ட், 2012

வாய்மூடி நின்ற மௌனங்கள்.......


காதலில் வீழ்ந்தவர்க்குத்தான் எத்தனை எத்தனை அனுபவங்கள்?
==========================================

==========================================
மௌனங்கள் (கொச்சகக் கலிப்பா)
=================================

சொல்லத்தான் எண்ணித் துணிந்திட்ட சொற்களையே
மெல்லத்தான் நாவேற்றி மெதுவாகச் சொல்கையிலே
காய்மூடி நின்றதொரு கரும்பச்சை இலைபோல
வாய்மூடி நின்றதோர் மௌனங்கள் எத்தனையோ?

வெள்ளமென உள்ளத்தில் உருவாகும் எண்ணத்தை
மெல்லத்தான் நாவேற்றி மெதுவாகச் சொல்கையிலே
தீமூடி நின்றதோர் செம்புகை போலவே
நாமூடி நின்றவொரு நேரங்கள் எத்தனையோ?

கள்ளமனம் கருவுற்ற காலமெலாம் காதலையே
மெல்லத்தான் நாவேற்றி மெதுவாகச் சொல்கையிலே
பால்மூடிப் படர்ந்திருக்கும் பாலேட்டை போலவே
சேல்விழி இமைக்குள்ளே சிந்தனைகள் எத்தனையோ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக