திங்கள், 6 ஆகஸ்ட், 2012

கண்ணா, கண்ணா.......

என்னுடைய மைந்தன் வைகறைச் செல்வனுடன் அமர்ந்து விளையாடுகையில், தோன்றிய சிறுவர் பாட்டு இது!
================================================

================================================
கண்ணா கண்ணா.....
====================

துள்ளி விளை யாடணுமே கண்ணா!
தூங்கி விழுந் தாடுவதோ கண்ணா?
சுள்ளெ னவே சொல்லுவதால் கண்ணா!
துன்பங் களும் தொலைந்திடுமோ கண்ணா!

எள்ளி யாடி சிரிப்பதனால் கண்ணா
இன்பங் களும் வந்திடுமோ கண்ணா!
உள்ள மதில் நேர்மையுடன் கண்ணா!
உள்ள வரே நலம்பெறுவார் கண்ணா!

பள்ளிக் கூடம் போகணுமே கண்ணா!
பாடமுந் தான் படிக்கணுமே கண்ணா!
புள்ளி னமாய்ப் பாடணுமே கண்ணா!
புகழு டனே வாழணுமே கண்ணா!

நல்ல வராய் வளர்வதனால் கண்ணா!
நட்பு கூடி வந்திடுமே கண்ணா!
வல்ல வரா யிருப்பதனால் கண்ணா!
மாண்பு மிக வாகிடுமே கண்ணா!

பெற்ற வரை உற்றவரைக் கண்ணா!
போற்று வதே உன்கடமை கண்ணா!
நற்ற மிழைத் தாயெனவே கண்ணா!
நத்து வதில் தான்பெருமை கண்ணா!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக