திங்கள், 6 ஆகஸ்ட், 2012

இயலுமோ?........


நானும் பலகாலம் என்னால் எதுவும் இயலுமென்று இறுமாந்திருந்தேன்.  நேற்று என்னுடைய உள்ளத்தில் தோன்றிய ஒரு எண்ணத்தின் விளைவாக இந்தக் கவிதை உருவெடுத்தது.  இயலாதவைகளின் பட்டியல் இன்னும் நீளும்.......
==================================================

==================================================
இயலுமோ?  (கொச்சகக் கலிப்பா)
===============================

சில்லென் றிருட்டிலே சிரித்திடும் பொறியெனக்
கல்லூரிக் கனவுகள் கருத்திலே கனன்றுநல்
மல்லிகைப் பூவுதிர் மணமதா யெழுகையில்
நில்லென் றெளிதிலே நிறுத்திட இயலுமோ?

இல்லத் தெதிரிலே இலங்கிய இனியவள்
மெல்லிய வலையெனும் விழியதாற் சிந்திடும்
வெல்லத் தினிப்பினால் மேவிடும் உணர்வினை
செல்லென் றுறுதியாய்த் திருப்பிட முடியுமோ?

மழலைகள் மடியினில் மகிழ்வுடன் அமர்ந்துதன்
கழுத்தினை கரங்களால் கயிறெனக் கட்டியே
அழகொளிர் இதழ்களால் அப்பாவென் றழைத்ததைக்
கிழவனும் எண்ணியேக் கிளர்வதும் மறையுமோ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக