செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012

தலையது குனிந்திடாப் பாவலன்....

பாவேந்தரின் பாட்டுப் பரம்பரையில் வந்த பாவலர்களின் ஒருவரும், தாழ்த்தப்பட்ட இனம் என்பதாலேயே, தன்னுடைய ஒரு காவியத்தைத் தொலைக்க நேர்ந்தவரும் ஆன கவிஞர் தமிழ்ஒளிக்கு வாழ்த்துப்பா:
==========================================













==========================================

கொச்சகக் கலிப்பா....
===================

வள்ளையாம் பாடலை மழையதன் துளியெனத்
தெள்ளிய தென்றலும் தெளித்திடும் மணமெனத்
துள்ளிடும் நந்தமிழ்ச் சொல்லதன் சுவையென
அள்ளியே தந்திடும் அருந்தமிழ்ப் பாவல!

அறத்தமிழ்ப்  பாட்டென அருள்மகன் புத்தனின்
பிறப்பெனும் கதையினைப் பிழையற உரைத்தனை;
துறைமுகஞ் சார்தொழில் துன்பமும், தாழ்ந்தவர்
உறுமிடர்த் துயரெனும் உண்மையும் உரைத்தனை!

உலையெரி நெருப்பெனும் உணர்வுறை பாக்களை,
விலையிலாப் பொதுநிலை மிளிர்த்திடப் புனைந்திடு 
தலையது குனிந்திடாத் தமிழ்ஒளிப் பாவல;
நிலைபெறுஞ் சிலையென நினைத்தினி வாழ்வமே!
==========================================
வள்ளைப்பாட்டு, மழைத்துளி, புத்தர் ஜனனம்,
துறைமுகத் தொழிலாளி, அரிசனர், நிலை
பெறும் சிலை, மேதினம் ஆகியவை கவிஞர்
தமிழ் ஒளியின் படைப்புகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக