புதன், 8 ஆகஸ்ட், 2012

கணித்தமிழ் வளர்ப்போம்.......


கணித்தமிழ் வளர்ப்பதென்பது  இற்றைக்கு மிகவும் இன்றியமையாத பணி.  ஏனென்றால், இனி வரும்காலம் கணித்தமிழ் காலமென்பதால்.
=========================================

=========================================
(இன்னிசை வெண்பா)
======================

கொடிமுல்லை சிந்தும் குளிர்மணத்தைக் கூட்டி
அடிவானம் தீட்டு மழகெழிலைச் சேர்த்துப்
படிக்கின்ற செம்மரபுப் பாட்டே! தமிழே!
விடிவெள்ளி போல்மிளிர்க வே!

(நேரிசை வெண்பாக்கள்)
=======================

எம்மின் தமிழின மென்று முயர்த்திடும்
உம்ப ரமிழ்தனை ஓண்டமிழை — நம்மை
கலக்கிடு மின்பக் கணிப்பொறி தன்னில்
வலம்வரச் செய்யவே வா!

வாழ்வில் பலரும் வழமைத் தமிழையே
தாழ்வென் றொதுக்குஞ் சழக்கையே -வீழ்த்த
வலைவலம் போகின்ற வண்டமிழ் அன்பர்
மலையா யெழுவோம் வளர்ந்து!

என்னி லுறைந்தெனை யென்று முயர்த்திடும்
கன்னற் சுவையாங் கணித்தமிழை — இன்று
வலம்வரும் வண்ண வலைதனி லோங்கி
நலம்பெறச் செய்வமே நாம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக