புதன், 8 ஆகஸ்ட், 2012

சந்தமவை வாழியவே.......

இணையத்தில் மரபியலைப்  போற்றும்  சந்தவசந்தம் மன்றத்திற்கு  வாழ்த்து!  மன்றத்தின் இழை:  சந்தவசந்தம்
==============================================

==============================================


இசைவொடு(ம்) இயல்பொடு(ம்) இன்றிளையர்
இனித்திடும் மரபெழிற் பாப்புனைய
தசையிலி எலும்பிலி யென்றிலங்க
தடம்பதித் திடுமுயர் செந்தமிழில்
அசையொடு தளையதை நன்குரைக்கும்
அருந்தமி(ழ்) இலக்கணச் சந்தமவை
விசையொடுந் திறத்தொடும் பன்முகமாய்
மிளிர்ந்திடப் பொலிந்திட வாழ்த்துகளே!

தளர்வறத்  தனித்துவம் கொண்டதனால்
வளங்களை வழங்கிடும் வள்ளலைப்போல்
வணங்கிடும் தமிழவள் வாழ்த்துடனே
இணையிலா இலக்கியம் ஓங்கிடத்தான்
அனுதினம்  இணையமே தாங்கிடத்தான்
வினைகளைப் புரிந்திடும்  சந்தமவை
பளிங்கெனப் பளிச்சொளி வீச்சுடனே
வளர்ந்திடப்  பொலிந்திட வாழ்த்துகளே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக